Sunday, December 27, 2015

ஒரு சிப்பாயின் சுவடுகளில்..!

வணக்கம் நண்பர்களே!
              
                 *இந்த கிராபிக் நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி பக்கம் வரை சொல்லப்பட்ட கதையை மட்டுமே சுருக்கமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். 
தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.!
---------//வாங்க நாமும் அந்த சிப்பாயின் சுவடுகளை பின்பற்றிப் போய் பார்ப்போம்.!-------- 

              *முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்., வியட்நாமில் புரட்சியை அடக்க புறப்பட்டு போன ப்ரெஞ்ச் படையில் பலியானவர்களின் சவப்பெட்டிகளை  சுமந்து கொண்டு ப்ரான்ஸ் வருகிறது ஒரு விமானம். 
சாதிக்க போன சிப்பாய்களில் சிலர்  சவப்பெட்டிகளாய் திரும்ப., அவற்றை பெற வந்திருக்கும் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது ஒரு தொலைகாட்சி நிறுவனம். ஒட்டுமொத்த ப்ரான்சும் நிகழ்சியை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
              *விவரிக்க இயலாத சோகத்தை முகத்தில் தேக்கி நிற்கும் ஒரு மூதாட்டியை பேட்டி எடுக்கிறார்கள். வியட்நாமுக்கு போன தன் மகனைப்பற்றி தகவலேதும் கிடைக்கவில்லை என்கிறாள் அம்மூதாட்டி. போர் முடிந்து திரும்பவும் இல்லை. இறந்தவர்களின் பட்டியலிலும் அவன் பெயர் இல்லை. ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருக்கிறாள் மூதாட்டி. 
"மிஸஸ் ஜோபர்ட் டி வலென்ட்ரே " என்று தன்னுடைய பெயரை மூதாட்டி சொன்னதும்  , ஒரு மனநோய் காப்பகத்தில் இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நியூரித் என்னும் நபர் வெறீபிடித்தவர் போலாகி டிவியை உடைத்துவிடுகிறார் (1)
              *அன்றிரவே காப்பத்திலிருந்து தப்பிச்செல்கிறார் நியூரித். இத்தகவலை டாக்டர் ரகசியமாக தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவிக்கிறார் (2) .
              *இதே நிகழ்ச்சியை ஒரு பாரில் இருந்து பார்க்கும் டீவி ரிப்போர்ட்டரான நிக்கோலஸ் வலோனுக்கு, காணாமல் போன மூதாட்டியின் மகனான அந்த  சிப்பாயை பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் யோசனை வருகிறது. மேலிடத்தில் போராடி அனுமதி பெறும் வலோன் அம்மூதாட்டியை காணச் செல்லும் வழியில் விபத்தொன்றில் ஒருவர் பலியானதை பார்க்கிறார்.  இறந்தவர் யாரென்று நிக்கோலஸுக்கு தெரியாது. நமக்கு தெரியும். அது மனநோயாளி நியூரித். இந்த இடத்தில் ஒரு நீலக்கலர் காரும் மர்ம நபர் ஒருவரும் காண்பிக்கப் படுகிறார்கள் (3)
              *கேப்ரியேல் லாரு  (3.1 ) என்றொரு பத்திரிக்கையாளர் மூதாட்டியின் வீட்டிற்கு செல்லும் வழியை வலோனுக்கு சொல்கிறார். ஹென்றியின் தாயான மூதாட்டியிடமிருந்து அவனுடைய நிழல் படம் ஒன்றையும் சில நண்பர்கள் மற்றும் காதலி பற்றிய தகவலோடு திரும்பும் வலோனை நீலக்கார் ஆசாமி பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டே வருகிறான்.
         
             *ஹென்றியின் காதலி மற்றும் நண்பரிடம் விசாரித்து , அவன் ப்ரெஞ்சு புரட்சி படையில் அங்கம் வகித்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்ததையும் , வியட்நாமிய கொரில்லா படையில் இணைந்ததையும்  அறிந்து கொள்கிறார் வலோன். ஹென்றி பற்றிய ஆராய்ச்சியை தொடர வேண்டாமென வலோனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஹென்றியே பேசுவது போல ஒரு போன்காலும் வருகிறது. ஆனால் அசராமால் தேடலை தொடர்கிறார் வலோன். 

             
             *அடுத்தடுத்த தகவல்களால் ஹென்றி குறித்த மர்மங்களே அதிகமாகிறதே தவிர அவனுக்கு என்ன ஆயிற்று?  உண்மையில் அவன் யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. தொடரும் தேடலில் குய்ச்சார்ட் என்ற நபருக்கு ஹென்றியைப் பற்றி நிறைய தவல்கள் தெரியும் என்று வலோனுக்கு தெரியவருகிறது. குய்ச்சார்ட்டின் வீட்டை  வலோன் அடைந்தபோது.  அவர் இறந்து கிடக்கிறார். (சற்று தூரத்தில் நீலக்கார் ஆசாமி தென்படுகிறார்.)
             *குய்ச்சார்ட்டின் வீட்டில் தேடியதில் வலோனின் கையில் சிக்குகிறது ஒரு கடிதம். அந்த கடிதம் வியட்நாமில் வசிக்கும் ஒரு பெண் குய்ச்சார்ட்டுக்கு எழுதியது. அந்தப் பெண் ஹென்றி ஜோபர்ட்டின் மகள்.
ஹென்றிக்கு குடும்பம் இருந்தது தெளிவாகவே., வியட்நாமுக்கு பயணிக்கிறார் வலோன்.  நீலக்கார் ஆசாமியும் பின் தொடர்கிறான்.
             *ஹென்றியின் மகளான கிம்சி தன்னுடைய தந்தை., ப்ரெஞ்ச் படையிலிருந்து எப்படி வியட்நாமீய கொரில்லா புரட்சி படையில் சேர்ந்தார் என்பதையும்.,  அவர் செய்த சில சாகசங்களையும் சொல்கிறாள். அவற்றுள் முக்கிய இடம் பெறும் சாகசமானது.,  ப்ரெஞ்ச் ஆயுதக்கிடங்கை ஹென்றி தலைமையிலான வியட்நாம் புரட்சியாளர்கள் சூறையாடுவதுதான். அந்த ஆயுதக்கிடங்கின் பொறுப்பதிகாரி காப்டன் கார்பினை (4) மடக்கி ஆயுதங்களை கிளப்பிக்கொண்டு போகிறது ஹென்றியின் செஞ்சட்டை படை.
              *சில நாட்கள் கழித்து துவாங் பை என்னும் இடத்தில் நிறைய போராளிகள் கைது செய்யப் படுகின்றனர். அந்த கைதிகளில்  தந்தை ஹென்றியும்  இருந்தாரா என்பது குறித்து கிம்சியின் தாய்க்கும் தெரியாது என்றும் அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் ஏதும் இல்லை என்கிறாள் கிம்சி. கிம்சிக்கும் தந்தை ஹென்றி எங்கே போனார்., என்ன ஆனார் என்பது பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனவே கிம்சியுடன் ப்ரான்ஸ் திரும்பும் வலோன், கிம்சியை அவளுடைய பாட்டியிடம் சேர்த்து விட்டு கேப்டன் கார்பினை சந்திக்க செல்கிறார்.
              

              *துவாங் பையில் போராளிகளை கைது செய்தவர் கேப்டன் கார்பின்தான். துவாங் பை என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட ஹென்றியை வேறோரு முகாமுக்கு அனுப்பிவிட்ட பிறகு அவனைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார் அன்றைய கேப்டனும் இன்றைய ஜெனரலுமான கார்பின்.
              *ஹென்றியின் நிலை குறித்த மர்மம் வெளிவரும் வாய்ப்பே இல்லையென்று வலோன் சோர்ந்து போகும் சமயத்தில் கேப்ரியேல் லாரு மூலமாக புஜால் என்றொரு நபரை சந்திக்கும்படி தகவல் வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே வலோனின் தொலைபேசியை ஒட்டுக்கேட்குமே நீலக்கார் ஆசாமி இதனையும் கேட்டுவிட்டு வலோனுக்கு முன்னதாக சென்று புஜாலை தீர்த்துக்கட்ட முயல்கிறான். கொலைமுயற்சியில் தப்பி மருத்துவமனையில் இருக்கும் புஜாலை சந்திக்கிறார் வலோன்.
              *ஹென்றி ஜோபர்ட் என்ற சிப்பாயின் சுவடுகள் முடிந்த தகவல்  புஜாலால், வலோனுக்கு  தெரிவிக்கப்படுகிறது. கேப்டன் கார்பினால்  கைது செய்யப்பட்ட ஹென்றி மற்றும் சில போராளிகள் டின்பின் முகாமில் நியூரித் மற்றும் புஜால் கைகளால் கொன்று புதைக்கப்படுகிறார்கள்.
              *பிடிபட்ட அணிமாறிய ப்ரெஞ்ச் சிப்பாய்களை கொல்லக்கூடாது என்று மேலிடம் சொல்லியிருந்தாலும் கேப்டன் கார்பினின்  உத்தரவுக்கு கீழ்படிந்து ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார்கள் நியூரித்தும் புஜாலும்.
               *வியட்நாம் போராளிகள் டின்பின் முகாம் செல்லும் வழியில் வண்டியை தாக்கி ஹென்றி உள்ளிட்ட போராளிகளை மீட்டுச் சென்றுவிட்டனர் என்று மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து விடுகிறார் கார்பின்!
              *தற்போது உயர்பதவியில் இருக்கும் ஜெனரல் ரோஜர் கார்பினுக்கு., ஹென்றி ஜோபர்ட்டின் முடிவு குறித்து வெளியே தெரிவதால் பல சிக்கல்கள் எழும் என்பதாலேயே வலோனின் ஆய்வை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன  என்பது வலோனுக்கு புரியத் தொடங்குகிது.
ஒரூ வழியாக ஹென்றி ஜோபர்ட்டின் வாழ்க்கை ( ஒரு சிப்பாயின் சுவடுகளில்)  ஆவணப்படமாக நிக்கோலஸ் வலோன் என்னும் விடாக்கண்ட ரிப்போர்ட்டரால் பூர்த்தியடைகிறது.
              (1)  - ஹென்றி ஜோபர்ட்டை சுட்டுக்கொன்ற (கேப்டன் கார்பின் உத்தரவால்)  இருவரில் ஒருவரே இந்த நியூரித். (இன்னொருவர் புஜால்.) 
அந்த குற்ற உணர்வே நியூரித்தை மனநோயாளி ஆக்கிவிடுகிறது.
டீவியில் பேட்டியளிக்கும் மூதாட்டி ஹென்றி ஜோபர்ட்டின் தாயார் என்று தெரிந்ததும் நியூரித் அப்படி நடந்து கொள்கிறார்.
              (2)  நியூரித் தப்பிச்சென்ற தகவலை டாக்டர் போனில் தெரிவிப்பது  இந்நாளைய ஜெனரல் கார்பினுக்குத்தான். அவ்வபோது நியூரித்தின் நிலைகுறித்து டாக்டர் கார்பினுக்கு தகவல் தந்து கொண்டிருப்பார்.
              (3)  தப்பிச்சென்ற நியூரித் ஹென்றி குறித்த தகவலை வெளியே சொல்லிவிடக்கூடும் என்றெண்ணி , நியூரித்தை கொல்ல கார்பின் அனுப்பும் ஆசாமிதான் நீலக்கார் மர்மநபர். தொடர்ந்து வலோனுடைய நடவடிக்கைகளை கண்காணித்து., அவருடைய முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதும் இதே நீலக்கார் ஆசாமிதான். (ஜெனரல் கார்பின் உத்தரவுப்படி.)
              (3.1) - ஹென்றியின் தாயாரைப் பார்த்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கவே நியூரித் தப்பிச் சென்றிருக்கிறார் என்று யூகித்த கார்பின்., மூதாட்டியின் கிராமத்துக்கு செல்லும் வழியிலேயே அவரை கொன்றுவிடுகிறார் (நீலக்கார் ஆசாமி உதவியுடன்.)  அந்த இடத்தில் வலோனை சந்தித்து மூதாட்டியின் வீட்டிற்கு வழி சொல்லும் கேப்ரியேல் லாரு என்னும் பத்திரிகை நிருபர்தான் பின்னர் புஜாலை பற்றி வலோனுக்கு தகவல் தருகிறவர்.
              (4) - வியட்நாமிய புரட்சிப்படையில் செஞ்சட்டை தளபதி என்று பெயர் எடுத்திருந்த ஹென்றி ஜோபர்ட்., ப்ரெஞ்ச் முகாம் ஒன்றை தாக்கி ஆயுதங்ளை கைப்பற்றுகிறான். அந்த முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் கேப்டன் கார்பின். அந்த சம்பவம் அவருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதாலேயே ஹென்றியின் மீது அதீத வன்மத்துடன் இருக்கிறார் கார்பின். பின்னர் துவாங் பையில் ஹென்றி கைது செய்யப்பட்டபோது., வெளியுலகுக்கு தெரியாமல் ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார் (நியூரித் மற்றும் புஜால் மூலமாக). இத்தனை தகவல்களையும் மிகுந்த சிரமப்பட்டு வலோன் ஆவணப்படுத்தி இருந்தாலும்., அதனை ஒளிபரப்ப டீவி நிலையத்திற்கு மேலிடம் தடைபோட்டுவிடுகிது. வலோன் தன்னுடைய அத்தனை உழைப்பும் வீணாக போனதால் விரக்தியில் "இதை இப்படியே விட்டுவிடமாட்டேன் " என்று ஆவேசமாக சொல்லிவிட்டு டீவி நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.

              *(நிக்கோலஸ் வலோனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாலும்., ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடைபோட்ட பிறகும் வலோன் வேறு வழிமுறைகளில் ஹென்றியின் வரலாற்றை வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சத்திலும் வலோனையும் தீர்த்துக்கட்டி இந்த முப்பாதாண்டுகால மர்மத்தை மர்மமாகவே நிலைத்துவிடச்செய்யும் எண்ணத்தில் நீலக்கார் மர்ம ஆசாமியை கார்பின் ஏவி விட்டிருக்கலாம் என்ற யூகம் என்னுடையது. கதையில் இல்லை)
              *வீட்டில் தனியாக பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தமிடுகிறது. கதவை திறக்கிறார் வலோன்.  பின்னனியில் நீலக்கார் தெரிய மர்ம ஆசாமி புன்னகையுடன் வாசலில் நிற்க., கிழித்து போடப்பட்ட ஹென்றி ஜோபர்ட்டின் புகைப்பத்துடன் கதை நிறைவடைகிறது.!!!
              *கிராபிக் நாவல் என்றால் நிலவேம்பு கஷாயத்தை குடிக்கும் முகபாவத்தை கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இயண்றவரை விரிவாகவும் சுருக்கமாகவும் இவ்விமர்சனத்தை எழுதியுள்ளேன்.
அழகான ஆழமான சித்திரக் கதையான "ஒரு சிப்பாயின் சுவடுகளில் "  இந்த விமர்சனத்திற்கு பிறகு ஓரிரூ நண்பர்களால் சிலாகிக்கப்பட்டாலாவாது டைப்படித்த என்னுடைய விரல்களுக்கு ஒத்தடமாயிருக்கும்.! !! 
பொறுமையாக படித்தமைக்கு நன்றி நண்பர்களே!!!
என்றென்றும் நட்புடன் -
KiD ஆர்டின் KannaN.
---------------------------------------------------------------
சென்ற பதிவுக்குப்பின் சிலபல காரணங்களால் பதிவிட காலதாமதம் ஆனதற்கு சன்னமான சாரியை நண்பர்கள் அனைவரிடமும் இருவரும் கேட்டுக்கொள்கிறோம்.......உங்கள்...
சேலம்Tex விஜயராகவன்&KiD ஆர்டின் KannaN.

60 comments:

  1. ஐ... பர்ஸ்ட்டு...

    ReplyDelete
  2. ஆஹா
    அருமை கண்ணன் ஜி
    தெளிவா கோர்வையாக சொல்லியிருக்கீங்க
    சூப்பரு :)
    .

    ReplyDelete
    Replies
    1. சிபிஜி! ரெண்டு முறை பாராட்டியிருக்கும் நல்ல மனசுக்கு என்ன கைமாற்று செய்யப் போகிறேன். (ஒற்றைக் கண் சிமிட்டும் படம் ஒன்று) :-)

      Delete
  3. ஆஹா
    அருமை கண்ணன் ஜி
    தெளிவா கோர்வையாக சொல்லியிருக்கீங்க
    சூப்பரு :)
    .

    ReplyDelete
  4. உங்க விமர்சனத்தை படிக்கும் போது, இந்த கதையை மீண்டும் புரட்டுனும் போல இருக்கு.

    உங்க எழுத்து நடை ரொம்ப கோர்வையா, தேவையானதை மட்டும் தெலிவா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திகேயன் சார்.!

      Delete
  5. புத்தகத்தில் படிக்கும் பொழுது ஒரு 25%புரிந்த மாதிரி இருந்தது ..இப்பொழுது இன்னும் ஒரு 25%அதிகரித்து உள்ளது தான் ....
    ஆனால்


    ஆனால் மீண்டும் சிப்பாயின் சுவடுகளை தேடுவேனா என்பது சந்தேகமே நண்பரே ...மன்னிக்க ....;-(

    ReplyDelete
    Replies
    1. பரணி!
      இப்போ 50% வந்துட்டிங்க.!
      இன்னொருமுறை கதையையும்., இந்த பதிவையும் படிச்சிட்டா 100% ஆயிடுமே?

      Delete
  6. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

    மிகவும் நன்றி.இது போல் உங்களைப்போன்று சந்து, பொந்து .இண்டு இடுக்கிலும் புகுந்து தெளிவாகவும் கோர்வையாகவும் இதுவரை கி.நா.கதையைப்பற்றி எழதவில்லை.நான் உங்கள் பதிவை படித்துவிட்டு ஒ.சி.சு.புத்தகத்தை படித்தேன்.அருமையாக புரிந்தது.மிக்க நன்றி .இதற்கு இடம்கொடுத்த சேலம் இரவு கழுகுக்கும் நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. ///இதற்கு இடம்கொடுத்த சேலம் இரவு கழுகுக்கும் நன்றி.!///

      இது எங்க ஏரியா :-)

      (நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் M V.!!

      Delete
    2. Mv சார்@///இதற்கு இடம்கொடுத்த சேலம் இரவு கழுகுக்கும் நன்றி.!///--- இது சேந்தம்பட்டி நண்பர்கள் தளம் சார், சகலருக்கும் சம உரிமை உண்டு(பாகுபலி ஸ்டைலில்)...
      மாடஸ்தி பற்றி படிக்க நாங்கள் ரெடி, பகிர நீங்கள் ரெடியா??...
      உங்கள் நன்றி தலீவருக்கு தான் சொந்தம், வழக்கமாக போஸ்ட் போட உதவும் நண்பர் மாயா சார் ,10நாள் விடுமுறையில் சென்றுள்ளார்,நேற்று திடீர் விசிட்டாக சேலம் வந்த தலீவர் உதவிட ,பதிவை போட்டு விட்டோம் MVசார்...

      Delete
  7. கண்ணன்....chronology படி கதையை விளக்கி பின்னர் இலக்கமிட்டு கதாசிரியரின் உத்தேசங்களை விரிவாக்கம் செய்து இருந்தது அருமை..

    Mv sir. !!!!!! கண்ணன் சென்னை புத்தக விழாவுக்கு வரும்போது செமத்தியாக கவனித்து விடுங்கள்.....:-)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.! நன்றி கடன்பட்டுள்ளேன்.!

      Delete
    2. நன்றி செனா அனா!!
      என்னை நன்றாக புரிந்து கொடிருக்கும் உங்கள் நட்பை எண்ணி பெருமையடைகிறேன்.!

      "செமத்தியாக " - ங்ஙே!!!!

      Delete
  8. இனி ஒரு ஓவியங்களை ரசித்து கதை படிக்கவேண்டும்.!
    குழப்பமான இடங்களை வரிசை எண்கள் கொடுத்து விளக்கியது அட்டகாசமான யுக்தி.அதில்தான் முன்பு குழப்பம் ஏற்பட்டு படிப்பதில் தடங்களை உண்டாக்கியது.இனிமேல் இஸட் சந்தா பற்றி எனக்கு கவலை இல்லை.!

    எனக்கு ஒரு டவுட்.!

    இந்த கதை உங்களுக்கு ஒரே தடவையில் புரிந்துவிட்டதா.? அல்லது பலதடவை ஆனதா.?

    உண்மையில் ஒ.சி.சு.நல்ல கதைதான்.மறுபடியும் நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. ///இந்த கதை உங்களுக்கு ஒரே தடவையில் புரிந்துவிட்டதா.? அல்லது பலதடவை ஆனதா? ///


      இரண்டாவது முறை மிகத்தெளிவாக!!!
      ஆனால் முதல்முறையிலேயே புரிந்து கொள்ளமுடியும். புஜாலின் வாக்குமூலம் இருக்கிறதே?!

      Delete
  9. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

    நான் இதுவரை கி.நா.வுக்கு தெளிவான கதைகள் கிடையாது.ஏதோ குத்துமதிப்பா ஏதோ புரிந்துகொண்டு டால்ஸ்டாய் கதைபோல் சீனை போடுகிறார்கள் என்றுதான் கருநேற்றுவரை கருதினேன்.ஏனென்றால் நான் இதுவரை எனக்கு தெரிந்த அனைவரையும் கதை கேட்டேன்.யாரும் தெளிவாக கூறவில்லை.மழப்பலான விளக்கம்தான் கொடுத்தனர்.அது ஏன் என்றே புரியவில்லை. கி.நா.என் வட்டத்தில் 100% பேருக்கு கதை புரியவில்லை.அவர்கூறிய வாசகம்.கதை யாருக்குமே தெரியாது என்றுதான் நேற்றுவரை நம்பினேன்.ஏனெனில் இதுவரை தெளிவான கதை யாருமே சொல்லவில்லை.இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பத்தினால் உருவான பதிவே இது நண்பரே.!

      Delete
  10. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
    நம் வாசகர்கள் அனைவருக்கும் லிங்க் கொடுங்கள்.அற்புதமான பதிவை அனைவரும் ரசிக்கட்டும். !

    ReplyDelete
    Replies
    1. மாயாவி சிவா அல்லது ஈரோடு விஜய் , இரண்டு நண்பர்களில் யாரேனும் ஒருவர்தான் ப்ளாக்கில் லிங்க் கொடுத்து எங்களை கௌரவிப்பார்கள். அவர்களுக்காக வெய்ட்டிங் M V.!!

      Delete
  11. மிக அருமையான பதிவு கிட் அப்படியே விடுதலையே உன் விலை என்ன கதைக்கும் ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர்!
      "விடுதலையே உன் விலையென்ன " , ஏற்கனவே நம்ம மாயாவி சிவா செஞ்சிட்டாரே!!!

      Delete
  12. கிட் ஆர்ட்டின் கண்ணன்.! இதுவரை பலர் கதையை பற்றி விமர்சனம் செய்தாலும்.,அவர்களது பார்வை ரசிப்பு எல்லாம் பின்னனி வரலாறு,ஓவியங்கள் பெருமை இவைகளை சார்ந்தே இருந்தது.! உங்கள் பதிவைபார்த்ததும்.பெரிய பில்டப் செய்து பென்சில் பேனா நோட்.,ஒ.சி.சு.உங்கள் பதிவு இவற்றை சுற்றிலும் வைத்துக்கொண்டுபெட்டில் உட்கார்ந்தேன்.

    ஆனால் உங்கள் பதிவு அவ்வளவு தெளிவு.மிகச்சுலபமாக புரிந்தது.ஓவியங்களுடன் ஒன்றிபடிக்கும் போது நாமே அங்கு சென்று உலாவுகின்ற மாதிரி பீலிங்.ஒ.சி.சு.கூட எடிட்டர் நான்கு பக்கங்கள் எழதியுள்ளார்.ஆனால் கதைபற்றி வாய்திறக்கவில்லை.அதுதான் சங்கடம்.நான் இதுபற்றி தனியே கடிதம் எழதபோறேன்.!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டிக்கும் நாலுமார்க் இதுக்கும் நாலுமார்க் அடடா "என்ன கொடுமை சார்.!"

      Delete
    2. இந்த ஸ்கிரிப்ட் அப்படி, அதனால் கிட் மாமோட பஞ் நஹீ....அதற்காக மதிப்பெண்களை குறைத்தது ஏற்புடையதல்ல மாயா சார்...ரீவேல்யூவேசன் ப்ளீச்....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வேதாள மாயாத்மா! ,
      நீங்க சொல்லும் நடையில் இந்த விமர்சனம் அமைந்திருக்குமேயானால்., விமர்சன நோக்கமும்., கதையின் முக்கியத்துவமும் வெளியே வராது., நைய்யாண்டி மட்டுமே முன் நின்றிருக்கும்.!

      உங்க ஆ(ணை)சையை அடுத்த பதிவில் நிறைவேற்றுகிறேனே.! !!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. அட! ஆமால்ல!
      இது விளக்கவுரைதானே.!

      கரீட்டா டிப்பெரன்ஸ் சொன்னிங்கோ வேதாளரே! சுகுரா இனிமே பாலோ பண்ணிக்கிறேன்.!

      Delete
    7. டெக்ஸ் விஜயராவன் .!//ரீவேல்யூசன் ப்ளிஸ்//

      மாயாவி&பிளேடு ஆகியோர் எழதிய பதிவுகள் கி.நா.வை " படித்து ரசித்த" கி.நா.ரசிகர்களுக்கு மட்டும் எழதியது.!உங்க மாம்ஸ் எழதியது என்னைப்போன்ற கி.நா.அல்லாத ரசிகர்கள்,குத்துமதிப்பா படித்தவர்கள் டால்ஸ்டாய் கதைபோன்று மவுனமாக உள்ளவர்களுக்காக எழதியது.அம்புட்டுதான்.!நான் கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களுக்கு995/100 மார்க் கொடுக்கின்றேன்.!

      Delete
    8. ஒவ்வ்வ்...இது கி.நா புரியாதவங்களுக்குன்னே போட்ட பதிவில்லையா...ஹீ..ஹீ...கவனிக்கமறந்துபோய்..இந்தி டியூசன் நடக்கற இடத்துல, இங்கிலிஷ் கிராமர் ஸ்டுடண்ட் வந்துட்டேன்..ஹீ..ஹீ...மன்னிக்க..! கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து வர்றேன்..!
      -
      -
      -
      -
      -
      -
      பதிவு நன்று..! தொடர்க..!

      Delete
  14. சிப்பாயின் சுவடுகளில், கிராபிக்ஸ் நாவல் புரியாதவர்கும் புரியும் வகையில் விமர்சனம் செய்திருப்பது சூப்பர். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் திருச்செல்வம் சார். எளிமையாக புரிய வைப்பது கிட் மாமா வின் தனிச்சிறப்பு,இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்...

      Delete
  15. supper +1

    சிவப்பு முடியை கொண்டு கதையை பல இடங்களில் வார்தைகள் இல்லாமல் சித்திரம் கொண்டு புரிய வைத்திருப்பார் கதாசிரியர் அருமையான கதை ஒரு நல்ல புத்தகம் இத்தகைய விளக்க உரை அபொழுதே வந்திருந்தால் கி ந என்ற சொல்லிற்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்திருக்கும். இன்னும் கெட்டுபோகவில்லை 2016 கி ந சந்தாவில் பலர் இணைய, இந்தகைய விளக்கம் நிச்சயம் ஒரு ஊக்கம் தரும் ரவி கண்ணன்.

    ReplyDelete
    Replies
    1. +1,மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல சதீஷ் ஜி....

      Delete
  16. உண்மை.! இவ்வளவு தெளிவாக விமர்சனம் அப்பவே செய்திருந்தால் கி.நா.தனி சந்தா அளவுக்கு மோசம் ஆகியிருக்காது.! தற்போது இந்த கதைபடிக்கும் போது இனம்புரியாத ஒரு உணர்வை கொடுக்கிறது.!

    ReplyDelete
  17. kid அருமையான விமர்சனம் & M.V ஸார் மாடஸ்டி பதிவை எதிர் நோக்கி ஆர்வமுடன்?!!!!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் இளா. நாங்களும் ஆவலுடன்......

      Delete
  18. மாறன் சார்.! மாடஸ்டியின் மார்க்கை எடிட்டர் மக்குபையன் ரேஞ்சுக்கு குறைத்துவிட்டதால்.,மனம் நொந்துவிட்டேன்.இதில் இருந்து முதலில் மீண்டுவர முயற்சிக்கிறேன்.போக்கிரி படத்தில் வடிவேல்.,சங்கிமங்கி என்று டூப்போட்டு அழவாரே அதைப்போல் அழுகத்தோன்றுகிறது.ஆனால் என் மனதில் என்றுமே மாடஸ்டிதான் இளவரசி.!ஹும்..........

    ReplyDelete
    Replies
    1. பீ கூல் MV சார். ஆசிரியர்&மாயா இருவரின் மனம் திறந்த மதிப்பீடுகளை நாம் ஏற்கத்தான் வேணும்...தீபாவளி மலரும் தான் மதிப்பெண்ணில் பின்தங்கியது,என்ன செய்ய........ இளவரசி பற்றி உங்கள் பார்வை யில் நாங்களும் ரசிக்கனும் சார், ஆவண செய்யுங்கள்....
      ஒட்டுமொத்த உங்கள் கருத்துக்கள் பலடோஸ் உற்சாகத்தை எங்களுக்கு அளித்துள்ளது,நன்றிகள் பல சார்... இனி தலா மாதம் ஒருமுறை நிச்சயமாக எழுதுவோம்....

      Delete
    2. saleemkelamaran, Thiruchelvam Prabhanabth, sathishkumar @ மனம் திறந்த பாராட்டுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர்களே!

      Delete
  19. கி.ஆ.கண்ணன் இந்த கதையை ஒரு முறையே படித்தேன் சில இடஙகளில் குழப்பம் இருந்தது இந்த பதிவை படித்த பிறகு தெளிவாகியது.இனி நான் மேலும் சித்திரத்துடன் ஒன்றி கதையை முழுமையாக படிக்க உள்ளேன்.
    கி ஆ-க்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தேங்ஸ் ஜெய்...///ஒன்றி கதையை முழுமையாக படிக்க உள்ளேன்.///- இது இதுதான் இந்த பதிவின் நோக்கம், மீண்டும் படிக்க தூண்டுவதே கிட் மாமாவின் லட்சியம்,....நாங்கள் இப்போ ஹேப்பி அண்ணாச்சி...

      Delete
  20. Replies
    1. Mv sir, பசங்க 2 படத்தில் வரும் குழந்தைகள் போல மாடஸ்தி பிர்லியன்ட் மார்க் எல்லாம் சும்மா. ஆரம்பமாகட்டும் உங்கள் பதிவு. மீண்டும் மிக ஆவலுடன்.

      Delete
  21. நண்பரே ...

    வித்தியாசமான முறையில் ஒரு பதிவு ... அந்த புத்தகத்தை மீண்டும் படிக்கும் வேண்டும் அதுவும் உங்கள் பதிவுடன் சேர்த்து படிக்க வேண்டும் என்ற நினைப்பை மனதில் ஏற்படுத்தியதே உங்களின் பதிவின் வெற்றி ...

    கை தட்டும் படங்கள் பல நூறு .....

    திருப்பூர் ப்ளுபெர்ரி (அ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. விடுமுறையில் நேரம் ஒதுக்கி பாராட்டுக்கள் தந்நமைக்கு ஸ்பெசல் நன்றிகள் ப்ளூ...

      Delete
  22. டெக்ஸ் விஜய், கிட்ஆர்ட்டின் இருவருக்கும் எனது வாழ்த்துகள்! கடினமான ஒரு கதைக்களத்தைக் படித்து புரிந்துகொண்டு, குறிப்பெடுத்து, அதை சுவையான வார்த்தைகளில் கொண்டுவர ரொம்பவே மெனக்கெடவேண்டியதிருந்திருக்கும்! உங்கள் உழைப்புக்கும் மெனக்கெடல்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்! த

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! வெல்கம் விஜய்... கடினமான பணிசூழலில் வருகைக்கும் வாழ்த்துக்கள்க்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.....டேக் கேர்..

      Delete

  23. ஈனா வினா., ப்ளுபெர்ரி, ஜெய் வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  24. எழுத்து நடை அழகாக செதுக்கப்பட்டிருககிறது! வாழ்த்துக்கள்! தெளிந்த விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. Guna karur @

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.!

      Delete
  25. கிட்@ கண்ணன் அருமையான, ஆழமான அலசல்.கி.நா வைக் கண்டால் பாய்ந்து ஓடுபவர்களுக்கு தங்கள் விமர்சனம் நிச்சயம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
    சிப்பாயின் சுவடுகள் முதல் வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை,மேலும் சற்றே கடின வாசிப்பை கொண்டதாய் தோன்றியது.
    எனினும் உங்களின் விமர்சனம் மீண்டும் ஒரு மறு வாசிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    ReplyDelete